Tamilnadu
பெட்டிக்கடையில் ரூ.15000 பணம் பறிப்பு : பா.ஜ.க நிர்வாகி கைது!
கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராகவும் இருந்து உள்ளார்.
இந்நிலையில் பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக் கூறி பெருமாள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேரூர் படித்துறை அருகே உள்ள பெட்டிக்கடை வைத்துள்ள வெற்றிவேல் என்பவரிடம் குட்கா விற்பனை செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் ரூ. 15,000 பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அவர் மீது சந்தேகம் அடைந்த வெற்றிவேல், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் பா.ஜ.க நிர்வாகி பெருமாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !