Tamilnadu
”விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் அண்ணாமலை” : ஜோதிமணி MP குற்றச்சாட்டு!
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பின்னணியில் இருப்பது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் என ஜோதிமணி MP குற்றம்சாட்டியுளளார்.
இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி MP,”பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமோ, அரசியல் முதிர்ச்சியோ கிடையாது. அரசியல் கட்சி தலைவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவது மட்டுமே அவரது வேலை. மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது கிடையாது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கு என்பது சட்டப்படி மிக கடுமையான குற்றச்சாட்டு. ரூ.100 கோடி அளவில் நில மோசடி செய்துள்ளார்.இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் இருக்கிறார்” என தெரிவிதுள்ளார்.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !