Tamilnadu
புதிய குற்றவியல் சட்டங்கள் - ”முதன்முதலாக தமிழ்நாடு போராடுவது மகிழ்ச்சி” : இந்து என்.ராம் பேச்சு!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.க பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம்,”மூன்று புதிய குற்றவியல் சட்டங்களால் பல விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சட்டங்கள் மூலம் நாங்கள் பழைய வழியில் செல்லபோகிறோம் என்பதை காட்டபார்க்கிறார்கள்.
ஆனால் காலம் மாறிவிட்டது. என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளை வைத்துதான் இன்று பா.ஜ.க தனது அரசை நடத்துகிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்போல. இந்துத்துவாவை மக்கள் மீது திணிக்கப் பார்கிறார்கள். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு முதன்முதலாக போராட்டம் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்திய தேசத்திற்கு ஏதாவது வருகிறது என்றால் எப்போதும் தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி பறக்கும். ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டங்களினால் எப்படி, வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றார்களோ அதேபோல் இந்த 3 குற்றவியல் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்ப பெறும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னை மழையின்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எங்கே இருந்தார் ? - அமைச்சர் சேகர் பாபு பதிலடி !
-
'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' திட்டம் : 91,488 மாணவர்கள் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு தகவல் !
-
பீகாரில் இருந்து வந்து 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை - முரசொலி காட்டம்!
-
13 வீரர்களுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி !
-
மகப்பேறு இறப்புகளை தடுக்க சுகாதாரத்துறையில் War Room : கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?