Tamilnadu
52.34 ஏக்கர் குத்தகை நிலம் மீட்பு - தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் கோடை காலங்களில் மெட்ராஸ் ரேஸ் கிளப் மூலம் குதிரை பந்தையம் நடைபெறும். உதகையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தையம் நடத்தி வருகிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகளும் போட்டிகளில் பங்கேற்கும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மெட்ராஸ் ரேஸ் கிளப் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ. 822 கோடியை செலுத்தாமல் இருந்தது.
இதையடுத்து இதுசம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள உத்தரவிட்டது. . இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உதகை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் வருவாய் துறையினர் 52.34 ஏக்கர் நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !