Tamilnadu

Omeprazole-ஆ Fomepizole-ஆ? குழப்பத்தில் பழனிசாமி : பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

கள்ளக்குற்சியில் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தனியா மருத்துவ குழு நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, போதிய மருந்துகள் இல்லை என அரசுக்கு அவப்பெயர்களை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் முதலில் Omeprazole மருந்து இல்லை என்றும், பிறகு அடுத்த நாள் Fomepizole மருந்து இல்லை என்றும் மாறி மாறி பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், ”20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன்.

•பிறகு இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.

•இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

•ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

•மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? : அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!