Tamilnadu
நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்கலமாகும். 1998 ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்டவை இணைந்து உருவாக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 109 மீட்டர் நீளம் கொண்டது, அதன் அகலம் 73 மீட்டர்கள். 450 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 93 நிமிடத்திற்கு ஒரு முறையும் பூமியை சுற்றி வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 15.5 முறை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 400 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகிறது.
இந்த சர்வதேச விண்வெளி மையம் உலகில் நிகழ்வும் பல்வேறு பூமியில் நிகழ்வு மட்டும் இன்றி வானியல் நிகழ்வையும் ஆய்வு செய்து வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி மையத்தை இன்று சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காண முடியும் என நாசா தெரிவித்திருந்தது.
இன்று இரவு சரியாக 07.09 மணியிலிருந்து ஏழு நிமிடங்கள் வரை இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என்றும் தென்மேற்கில் தொடங்கி வட கிழக்கில் மறையும் என்றும், வெண்புள்ளியாக இந்த சர்வதேச விண்வெளி மையம் காட்சியளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரவு சரியாக 7.09 மணியளவில் சர்வதேச விண்வெளி மைய்யம் பூமியை சுற்றியதை காண முடிந்தது.
இதனை மக்கள் பலரும் வீடியோவாகவும் ஃபோட்டோவாகவும் எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!
-
ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !
-
"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !