Tamilnadu

பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்கள் இருவரும் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று காரில் திருநெல்வேலிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது கார் நெடுங்குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பள்ளத்தில் நீர் இருந்ததால் காரில் இருந்து கணவன், மனைவி இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: "களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !