Tamilnadu
’வாசிக்கலாமா’ : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம் : அது என்ன?
கல்விக்கு என்று தனிக்கவனம் செலுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகள் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அப்பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையத்தை அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக எம்.ஆர்.எப் பூங்கா, எம்.எம்.டி.ஏ பூங்கா, கே.கே.ஆர் கார்டன், அன்சா கார்டன், ஜீவா பூங்கா, ராகவேந்திரா பூங்கா, மே தின பூங்கா உள்ளிட்ட 10 பூங்காக்களில் இந்த திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ராயபுரத்தில் உள்ள ராகவேந்திரா பூங்காவில் புத்தக வாசிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் புத்தக மையத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்து சிறிது நேரம் படித்துச் செல்கிறார்கள்.
Also Read
-
கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!
-
ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !
-
"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !