Tamilnadu
குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள்.. கடல் அலையில் சிக்கி பரிதாப பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல், முகேஷ், ஆகாஷ். இந்த மூன்று சிறுவர்களும் அருகே உள்ள கடற்கரைக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் மாயமாகி உள்ளனர். இதுபற்றி அறிந்த உடனே கடலோர காவல் குழுவினர் மீட்புப் பணி மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சபாநாயகர் அப்பாவு இரவு நேரத்திலும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் நவ்வலடி அருகே உள்ள கோடாவிளை என்ற இடத்தில் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் முகேஷின் உடலும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குளிக்கச் சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
சென்னை மழையின்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எங்கே இருந்தார் ? - அமைச்சர் சேகர் பாபு பதிலடி !
-
'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' திட்டம் : 91,488 மாணவர்கள் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு தகவல் !
-
பீகாரில் இருந்து வந்து 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை - முரசொலி காட்டம்!
-
13 வீரர்களுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி !
-
மகப்பேறு இறப்புகளை தடுக்க சுகாதாரத்துறையில் War Room : கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?