Tamilnadu
முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஆதரவளித்த அ.தி.மு.க... ‘நீட்’ நிரந்தர விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம்!
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நிலையில் அவையிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தங்களது ஆட்சியில் நீட் நுழைவுத்தேர்வை அனுமதித்துவிட்டு நீட் தேர்வை எதிர்ப்பதாக அ.தி.மு.க கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலன் கருதி நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கவேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நீட் மசோதாவுக்கு அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையிலான தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !