Tamilnadu
வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவது எப்போது? - சத்ய பிரதா விளக்கம் !
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஏப்.,18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
மேலும் பேசிய அவர், மே 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, தேர்தல் அலுவலர்களுக்கு தக்க பயிற்சி வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 கம்பெனி பாதுகாப்பு படை கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !