Sports
”தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடரட்டும்” : பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பதக்கங்களை பெற்று வருகின்றனர்.அந்தவகையில், பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் இதே பிரிவில், இந்தியாவின் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ரியோ, டோக்கியோவை தொடர்ந்து பாரீஸ் பாரா ஒலிம்பிக்கிலும் மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "3-வது முறையாகப் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”GSTயை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள்” : வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி!
-
“நீட் விலக்கு : ஒன்றிய அரசின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்துவிட்டோம்” - அமைச்சர் ரகுபதி !
-
“அதானி காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வேன்” -இலங்கை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு !
-
45-வது செஸ் ஒலிம்பியாட் : தங்கப்பதக்கத்தை நோக்கி முன்னேறும் இந்திய அணி : மகளிர் அணி முதல் தோல்வி !
-
சுதந்திரத்துக்கு முன்னரே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை எதிர்த்த தமிழ்நாடு : முரசொலி தலையங்கம் !