Sports
”எனது போராட்ட குணம் எப்போதும் மாறாது” : தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத் ஓபன் டாக்!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என சர்வதேச தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வினேஷ் போக்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடைசிவரை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இரவு முழுவதும் எங்கள் போராட்டம் இருந்தது. ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது. எனது குழுவுக்கும், சக வீரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் சொல்வது, எந்த இலக்கை அடைவதற்காக உழைத்தோமோ அது நிறைவேறாமல் இருப்பதாக உணர்கிறேன்.
என் போராட்ட குணமும், மல்யுத்தமும் எப்போதும் எனக்குள் இருக்கும். சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருந்தால் 2032 வரை நான்விளையாடி இருப்பேன். எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால் நான் எப்போதும் சரியான விஷயங்களுக்காக துணிச்சலுடன் போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Also Read
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாய்ந்த ஊழல் வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி !
-
சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு... இளைஞரை கொடூரமாக தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி கைது !
-
மகனின் 5-வது பிறந்தநாள் கொண்டாட்டம்... மேடையிலேயே சட்டென்று சுருண்டு விழுந்த தாய்... சோகமான குடும்பம்!
-
தேவரா : “உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன்...” - மேடையில் கோர்வையாக தமிழில் பேசி நெகிழ்ந்த ஜான்வி கபூர்!
-
“பா.ஜ.க.வின் அடக்குமுறை நடைமுறையால் நாடு தத்தளிக்க நேரிடும்!” : சமூக சிந்தனையாளர்கள் கண்டனம்!