Sports
"பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" - திமுக MP வில்சன் கோரிக்கை !
தற்போது இந்தியா முழுக்க நெடுசாலைகளில் சுங்க சாவடிகள் அமைத்து ஒன்றிய அரசு வசூல் செய்து வருகிறது. தனியார் மூலம் வசூல் செய்யப்படும் இந்த சுங்க சாவடிகள் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடிகளை மூடவேண்டும் என ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகளை நாடு முழுவதும் அகற்ற வேண்டும் என திமுக எம்.பி பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், "சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அடிப்படை உரிமை. அதிகரித்து வரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் சுங்கக் கட்டண உயர்வும் தமிழ்நாட்டு மக்கள் உட்பட நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி வருகின்றது. தற்போது, தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன, குறைந்தது ஐந்து சுங்கச்சாவடிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள் உள்ளன.
20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் 60 கி. மீ தூர வரம்பை மீறி அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சுங்கச்சாவடியை மூடுவதாக உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை --திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32-ல் உள்ள பரனூர் சுங்கச்சாவடி ஒரு தெளிவான உதாரணம்.
சி.ஏ.ஜி. அறிக்கையின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.28.54 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும், மேலும், 40 சதவீத சுங்கச்சாவடி கட்டணத்தைகுறைக்க விதிகளை பின்பற்ற வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த சுயாதீனமான அமைப்பு என்று எதுவும் இல்லை, மேலும் அவ்வப்போது உயர்த்துவதற்கான தற்போதைய சூத்திரம் மிகவும் தன்னிச்சையானது மற்றும் அடிப்படை இல்லாதது என்பதுடன் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்ட உதவுகிறது. முழு சுதந்திரமும் பொது நலனுக்கு எதிரானது, இது ஏழைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பதாகும்.
இந்த சுங்கச்சாவடிகளில் முதலீடுகள் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகைகளை பகுப்பாய்வு செய்ய ஒரு சுயாதீன தணிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி, வாகனத்தை பதிவுசெய்யும்போதே ஒரு முறைக்கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதை முன்மொழிகிறேன். இது சுதந்திரமான இயக்கத்திற்கான உரிமையைமதிக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதி செய்யும்"என்று கூறினார்.
Also Read
-
போலி காவல் நிலையம், போலி டோல் கேட் வரிசையில் போலி நீதிமன்றம் : உலகமே வியக்கும் குஜராத் மாடல்!
-
சட்டவிரோத பண பரிவத்தனை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !
-
சென்னை மழையின்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எங்கே இருந்தார் ? - அமைச்சர் சேகர் பாபு கேள்வி !
-
'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' திட்டம் : 91,488 மாணவர்கள் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு தகவல் !
-
பீகாரில் இருந்து வந்து 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை - முரசொலி காட்டம்!