Sports
நீரஜ் சோப்ராவுக்கு மேலும் ஒரு தங்கம் : பாவோ நூர்மி தொடரில் முன்னணி வீரர்களை வீழ்த்தி அபாரம் !
ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர், உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் என அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில், பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா 83.62 மீட்டர் தூரம் எறிந்த நிலையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெலாண்டர் 83.96 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை விட முன்னிலை பெற்றார்.
எனினும் விட்டுக்கொடுக்காத நீரஜ் சோப்ரா, மூன்றாவது சுற்றில் 85.97 மீட்டர் தூரம் எரிந்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். இரண்டாவது இடத்தை பின்லாந்து வீரரான டோனி கெரானன் (84.19 மீட்டர்) , மூன்றாம் இடத்தை பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலண்டர் (83.96 மீட்டர்) ஆகியோர் பிடித்தனர்.
Also Read
-
'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' திட்டம் : 91,488 மாணவர்கள் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு தகவல் !
-
பீகாரில் இருந்து வந்து 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை - முரசொலி காட்டம்!
-
13 வீரர்களுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி !
-
மகப்பேறு இறப்புகளை தடுக்க சுகாதாரத்துறையில் War Room : கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
-
காவிமய போக்கு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது - அரசமைப்பிற்கு முரணானது! : செல்வப்பெருந்தகை அறிக்கை!