Sports

பஞ்சாப் : நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட அர்ஜுனா விருது பெற்ற பளுதூக்கும் வீரர்.. ஆட்டோ ஓட்டுநர் கைது !

பஞ்சாபை சேர்ந்தவர் டல்பீர் சிங் தியோல். இவர் பளுதூக்கும் வீரராக இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்றுள்ளார். இதன் காரணமாய் இவருக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது.

விளையாட்டு வீரரான இவர் தற்போது பஞ்சாப் காவல்துறை அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர் தனது வீட்டுக்கு செல்ல ஒரு ஷேர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் டல்பீர் சிங் தியோலிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரின் தலையில் சுட்டுள்ளார். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில், கவலைதரும் அதிகாரி டல்பீர் சிங் தியோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் அந்த வழியே வந்த காவலர் ஒருவர் சக காவலர் ஒருவர் உயிரிழந்து கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "IPL தொடர் ஒலிம்பிக் தொடருக்கு நிகரான தரத்தை கொண்டுள்ளது" - முன்னாள் ஆஸ். பயிற்சியாளர் புகழாரம் !