Politics
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வெளியான கணிப்புகள்! : அக்டோபர் 8-ல் அரியானா, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவு!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களான அரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேர்தல்களின் வாக்குப்பதிவு நிறைவுற்றுள்ளது.
அரியானாவில், 10 ஆண்டுகால பா.ஜ.க அரசின் வஞ்சிப்புக்கு பின், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் என்ற முறையிலும்; ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தகுதி, மக்களாட்சி உரிமை பறிப்புக்கு பின், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் என்கிற முறையிலும் இத்தேர்தல்கள் கூடுதல் அரசியல் கண்ணோட்டத்தைப் பெற்றன.
அரியானாவில் காங்கிரஸ் தனித்து பெரும்பான்மை இடங்களில் போட்டியிட்டு தேர்தலை எதிர்கொண்டது. ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிட்டது.
எதிர்முனையில் பலவீனமான நிலையில் பா.ஜ.க பல்வேறு அடிகளைத் தாங்கிக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டது. அதன் விளைவு, தற்போது தேர்தலுக்கு பின்னான, கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது.
90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் 50 - 58 இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் இருக்கிறது என்றும், 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு - காஷ்மீரில் சுமார் 50 இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இருக்கின்றது என்றும் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இக்கணிப்புகள், பா.ஜ.க.வின் ஆதிக்க அரசியல் நடைமுறைக்கு பலத்த அடியாக மாறியுள்ளது. இந்தியா கூட்டணியின் மதநல்லிணக்க கருத்தியலும், சமூக நீதி கருத்தியலுமே, வெற்றிக்கான வித்து என்று கருத்துகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Also Read
-
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடப்பார்த்ததுதான் பாஜக அரசு - அம்பலப்படுத்திய முரசொலி !
-
ஆளுநருக்கு சவால்விட்ட முதல் பத்திரிகையாளர் முரசொலி செல்வம்! : ‘தி இந்து’ என்.ராம் புகழுரை!
-
நட்பின் இலக்கணம் - என் ஆசிரியர் முரசொலி செல்வம் : அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!
-
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! : படத்திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவப் படம் திறப்பு!