India
குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை! : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!
இந்தியாவில் பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் குழந்தை திருமணங்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குழந்தை திருமணத்திற்கு முழுமையான முட்டுக்கட்டை இடப்படாமலேயே இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் குழந்தை திருமணத்திற்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளில் சில மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை திருமணத்தைத் தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நாடு முழுவதும் குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது.
குழந்தை திருமண விவகாரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்” என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
Also Read
-
ஆளுநர் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து : "ஆளுநரா? ஆரியநரா?" - முதலமைச்சர் கண்டனம் !
-
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்... CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரும் பலி... யஹ்யா சின்வாரின் கடைசி நிமிடம் என வீடியோ வெளியீடு !
-
இந்தியை திணிக்க முயற்சி செய்கிற ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! : தி.மு.க மாணவர் அணி அறிவிப்பு!
-
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் 'இந்தி' மாத விழா - கண்டனம் தெரிவித்து மோடிக்கு முதலமைச்சர் கடிதம் !