India
”நீதி வெல்ல வேண்டும்” : பாபா சித்திக் கொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!
மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல் நகர் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வுமானஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பாபா சித்திக்கின் மோசமான மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாகவும், இந்தக் கடினமான நேரத்தில் தனது எண்ணங்கள் முழுமையாக அவரது குடும்பத்தைப் பற்றியே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை இந்தப் பயங்கர சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்றும், இந்தப் சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும், நீதி வெல்ல வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !
-
"முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கனமழையால் சென்னையில் பாதிப்பு ஏற்படவில்லை" - அமைச்சர் துரைமுருகன் !
-
முதலீடுகளை விரைவில் செயல்படுத்தும் வகையில் வணிக விதிகளில் திருத்தம் - தமிழ்நாடு அரசிதழில் வெளியானது !
-
வடகிழக்குப் பருவமழை - அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஸ்