India

குஜராத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதை பொருள் : ரூ.5 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்!

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் தொடர்ச்சியாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் போதை பொருள் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, போலிஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 518 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் இருந்தை போலிஸார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

அதேபோல் கடந்த அக்.10 ஆம் தேதி 208 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 மாதங்களாக காத்திருக்கும் 2 லட்சம் மருத்துவர்கள் : தாமதமாகும் முதுநிலை நீட் முடிவுகள்!