India
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாகர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது மனைவி உயிரிழந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இரண்டாவது மனைவிக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திவாகர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தந்தை திவாகரை கைது செய்தனர்.
Also Read
-
“நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” - தீஸ்தா செதல்வாட் புகழாரம்!
-
துப்பாக்கிச் சூடு விவகாரம் : பேட்டியளித்த வழக்கறிஞர்... நோட்டீஸ் அனுப்பிய சல்மான் கான்.. நடந்தது என்ன ?
-
லஞ்சம் பெறுவதாக தகவல்... புதுவை அரசு அதிகாரியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை - நடந்தது?
-
”ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டம் நிறைவேறாது” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
காலையில் ஜாமீன்.. மீண்டும் கைது.. தொடர் சிக்கலில் பாஜக MLA: பெண் அளித்த பாலியல் புகாரால் அதிரடி -பின்னணி?