India

ஐயன் திருவள்ளுவர் சிலை வானுயர்ந்து  நிற்கிறது! - சத்ரபதி சிவாஜி சிலை நொறுங்கியுள்ளது! : செல்வ பெருந்தகை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை, வசந்தகுமாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை,

“தொடர்ந்து தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது, நியாயமான விதத்தில் நிதியும் ஒதுக்கவில்லை பல துறைகள் அதற்கு சாட்சியாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ரயில்வே துறையில் ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த மாவட்ட,  வட்டார தலைவர்கள் எல்லாம் மக்களிடம் கையேந்தி ஒரு ரூபாய் கூடுதலாக போட்டு ஆயிரத்து ஒரு ரூபாயை ரயில்வே துறைக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

ரயில்வே  அமைச்சரின் வங்கி கணக்குக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் தவனாகிய இந்திய ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுத்திருக்கிறது.

தேர்தல் வரை பெட்ரோல் டீசல் எரிவாயு  விலையை ஏற்றாமல் தேர்தலுக்காக வைத்திருந்தது, இப்பொழுது அனைத்து விலைகளையும் ஏற்றி விட்டது சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆறு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுந்திருக்கிறது இதுதான் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் இலட்சணம்.

ஊழல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது, அதானிக்கு கடன் தள்ளுபடி,  சலுகை, யார் தொழில் பண்ணாலும் தொழிலை பிடுங்கி அவரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் சிறை பிடிக்க வேண்டும். இதுதான் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி. இதுவரை சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது குறித்து ஒன்றிய அரசிடமிருந்தோ மாநில அரசிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. ஒன்றிய அரசு உலகத் தலைவர்களின் பெருமையை சிதைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடந்தபோதும், கலைஞர் ஆட்சி  நடந்தபோதும், ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டு இருக்கிறது.  இன்று வரை எத்தனை சுனாமி வந்தாலும்,  எவ்வளவு பெரிய அலைகள்,  கடல் சீற்றம் வந்தாலும் ஐயன் திருவள்ளுவர் சிலை வானுயர்ந்து  நின்று கொண்டிருக்கிறது. இதுதான் ஒன்றிய மோடி அரசிற்கும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

கங்கனா ரனாவத் விவசாயிகளை குறித்து பேசியதை குறித்து இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிளின் போராட்டத்தை குறித்து இழிவாக பேசி உள்ளார். இது பாஜகவுடன் குரல் இல்லை பாஜக செய்தி இல்லை என்றால், வேளாண் விவசாய மக்களே இழிவுபடுத்தி பேசிய கங்கனா ரனாவத் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடல் தாமரை மாநாடு என்று பாஜகவால் தீர்மானம் ஏற்றப்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கள் கூட தாக்கப்பட மாட்டார்கள், பாதுகாப்பாக மீனவர்கள் இருப்பார்கள் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு, இப்பொழுது மீனவர்களின் உயிர்ப்பலிகளும் இலங்கை அரசாங்கம் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வெளியுறவு துறையின் செயல் படுதோல்வி அடைந்துள்ளது, குஜராத் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க தவறியுள்ளது” என்றார்.

Also Read: ”ஆவின் பொருட்கள் ரேஷன் கடையில் விற்பனை” : அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!