India
வயநாடு பேரழிவு : மக்களுக்கு வழங்கிய நிவாரணத்தில் EMI பிடித்தம் செய்த வங்கி : கேரள முதல்வர் கண்டனம் !
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கொண்டோண்டனர். பல நாட்கள் நடைபெற்ற மீட்புப்பணியில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், இந்த பேரழிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள மாநில அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய நிலையிலிலும், அதனை ஒன்றிய அரசு மறுத்துவிட்டது .
இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஏராளமானோர் நிதியுதவி செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் உலா மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை கேரள அரசு அறிவித்தது. மேலும், இந்த தொகை சம்மந்தப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இவ்வாறு நிவாரணமாக வழங்கப்பட தொகையில் இ.எம்.ஐ யாக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான கேரளா கிராமிய வங்கியே இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி அந்த பகுதி மக்கள் வங்கி கிளையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது குறித்துப் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும். அதனை விட்டு இந்த செயலில் ஈடுபட்ட வங்கியின் செயல் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார். மேலும், பிடிக்கப்பட்ட இ.எம்.ஐ தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
லப்பர் பந்து முதல் கடைசி உலகப் போர் வரை... நாளை திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய தமிழ் படங்கள் என்ன?
-
போலி IAS அதிகாரியாக புகார் கொடுக்க வந்த பெண்... உடந்தையாக இருந்த தூத்துக்குடி பாஜக நிர்வாகியும் கைது!
-
தேவதானம் திருக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு... - அறநிலையத்துறை அதிரடி!
-
நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பாஜகவின் நூதன மோசடி.. கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்.. நடந்தது என்ன?
-
Instagram-ல் ஆபாசமாக பாடல் பாடி வீடியோ வெளியிட்ட கானா கௌதம்... தட்டி தூக்கிய திருச்சி போலீஸ் !