India

மீண்டும் உருவெடுக்கும் அதானி ஊழல் : ஹிண்டன்பர்க் பகீர் குற்றச்சாட்டால் சரிந்த அதானி பங்குச்சந்தை !

ஒன்றிய பாஜக அரசுக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், பாஜக அரசு, அரசின் சொத்துகள் உள்பட பலவற்றை அதானி குழுமத்திற்கே வழங்கி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. அதன்படி விமான நிலையங்கள், சூரிய ஒளி மின்சார நிலையங்கள், இராணுவ தளங்கள், நிலக்கரி சார்ந்த தொழில்கள் என அரசு உடைமைகள் பல அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் பெரிய உறுதுணை இருப்பதாலே, அதானியின் பங்குகளும் உச்சத்தில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை வெளிப்படுத்தியது. போலி அடையாளங்கள் மூலம், போலியாக பங்குச்சந்து உயர்வை காட்டி, பல வங்கிகளில் பல்லாயிரக் கோடி பணத்தை கடன் வாங்கியதை அம்பலப்படுத்தியது.

தொடர்ந்து அதானியின் ஊழலையும் வெளிகொண்டு வந்தது. இதனால் அதானியின் சர்வதேச பங்குச்சந்தை மதிப்பு சரிவில் காணப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் விவாதம் கேட்டபோது, அதற்கு ஒன்றிய பாஜக அரசு மறுப்பும் தெரிவித்தது. தொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் SEBI விசாரணையை முறையாக நடத்தாமல் மந்தமாக செயல்பட்டது. இதனால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், SEBI விசாரணையே போதுமானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் சுமார் 18 மாத காலமாக அமைதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

அதாவது நேற்று (ஆக.11) அதானி குழுமம் முறைகேட்டிற்கு பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் SEBI தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

மேலும் இதனால்தான் இந்த விசாரணையை SEBI மிகவும் மெதுவாக விசாரிபபதாகவும், SEBI தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி மாதபி ஆதாயம் தேடுவதாகவும், எனவே SEBI விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் Hindenburg தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதற்கான ஆதாரங்களையும் தனது தள்த்தில் வெளியிட்டுள்ள Hindenburg, மேலும் பல குற்றச்சாட்டுகளை அதில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், அதானியின் பங்கு தற்போது சரிந்து வருகிறது. Hindenburg நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலால், இன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்துள்ளது. இந்த பங்கு சதவீதம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து அதானி குழுமும், செபி தலைவர் மாதபி புச்சும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் “2015ல் தற்போதைய செபி தலைவர் மாதபி புச்-ம், அவரது கணவரும் சேர்ந்து 56 கோடி ரூபாயை சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளதாகவும், இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Also Read: அதானி பங்குகளில் செபி தலைவர் ரூ. 56 கோடி முதலீடு செய்துள்ளார்! : பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்!