India

lift-ல் மாட்டிக் கொண்ட நபர் : 2 நாட்களுக்கு பிறகு மீட்பு - நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர். 59 வயதாகும் இவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளளார்.

அப்போது அவர் முதல் தளத்திற்கு செல்வதற்காக lift-டை பயன்படுத்தியுள்ளார். இவர் உள்ளே சென்றதும் lift வேலை செய்யவில்லை.மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப்பாகியுள்ளது.

lift-ல் இவர் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார். இவர் உதவிக்காக கூச்சலிட்டதும் வெளியில் இருந்த யாருக்கும் கேட்கவில்லை.

இதையடுத்து திங்களன்று lift ஆபரேட்டவர் வழக்கமான பணிக்காக liftடை இயக்கியுள்ளார். அப்போதுதான் கடந்த இரண்டு நாட்களாக ஒருவர் மாட்டிக் கொண்டனது அனைவருக்கும் தெரிந்தது.

இரண்டு நாட்களாக உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார் ரவீந்திரன். மேலும் இவர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களாக lift மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ட்ரம்ப் சுடப்பட்ட விவகாரம் : “என்னையும் 2 முறை கொலை செய்ய முயன்றார்கள்” - எலான் மஸ்க் பகீர் !