India
வீதியில் திண்டாடும் இளைஞர்கள் : மோடி மாநிலத்திலேயே இப்படி ஒரு நிலை - பாஜக ஆட்சியின் லட்சணம் இதுதான் !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே நாட்டுக்கு எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் மக்கள் நலனுக்கு பதிலாக பெரிய தொழிலதிபர்களின் நலன்களையே பேணி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
இதனை எதிர்க்கட்சிகள் மக்கள் என அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையிலும், இதனை கண்டுகொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசு இருந்து வருகிறது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை ஆண்டுதோறும் அதிகரித்தே காணப்படுகிறது. இதுகுறித்து பேசச்சொன்னால், படித்தவர்களும் பக்கோடா விற்றுக் கூட பிழைக்கலாம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இவ்வாறு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தற்போது தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பாஜக ஆளும் குஜராத்தில் கடல் போல் மக்கள் திரண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பரூச் என்ற பகுதியில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றுக்கான வேலைவாய்ப்பு முகாம் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நேர்காணலில் வேலை தேடுபவர்கள், நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். அதன்படி கடந்த ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலையில்லா ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் வெறும் 5 பிரிவில் 42 இடங்கள் மட்டுமே உள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு முகாம் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்த தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் மட்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இளைஞர்கள் முண்டியடித்து செல்ல முயற்சி செய்த நிலையில், பலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இது தான் பாஜக ஆட்சியின் லட்சணம் என்றும், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலத்தில் இதுபோன்ற அவலநிலை ஒட்டுமொத்த பாஜக ஆட்சியையும் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
போலி IAS அதிகாரியாக புகார் கொடுக்க வந்த பெண்... உடந்தையாக இருந்த தூத்துக்குடி பாஜக நிர்வாகியும் கைது!
-
தேவதானம் திருக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு... - அறநிலையத்துறை அதிரடி!
-
நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பாஜகவின் நூதன மோசடி.. கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்.. நடந்தது என்ன?
-
Instagram-ல் ஆபாசமாக பாடல் பாடி வீடியோ வெளியிட்ட கானா கௌதம்... தட்டி தூக்கிய திருச்சி போலீஸ் !
-
வடலூர் வள்ளலார் பெருவெளி நிலத்தில் மருத்துவமனை : அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு!