India
தனிமையில் இருந்த வீடியோவை வைத்து மிரட்டல் : மாடலிங் பெண்ணை கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர் !
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா பகுஜா (வயது 27). மாடல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் அங்குள்ள விளம்பர நிகழ்வுகள் மற்றும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக பங்கேற்று வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிஜீத் சிங் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபிஜீத் சிங் சிட்டி பாயின்ட் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் அறை எடுத்து தங்கும் அளவு சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் தனிமையில் இருந்த வீடியோகளை அபிஜீத் சிங்குக்கு தெரியாமல் திவ்யா பகுஜா வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அதோடு அந்த வீடியோக்களை காட்டி அபிஜீத் சிங்கை மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாத அபிஜீத் சிங் திவ்யா பகுஜாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஜனவரி 2 அன்று திவ்யாவை ஒரு பகுதிக்கு வரவழைத்த அவர் அங்கு வைத்து அவரை கொலை செய்துள்ளார். மேலும், 10 ஆளுக்கு 10 லட்சம் கொடுத்து தனது நண்பரகளான ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரின் உதவியோடு திவ்யாவின் உடலை அப்புறப்படுத்தியுள்ளார்.
இதனிடையே திவ்யா பகுஜா கொலை குறித்து விசாரணை நடத்திய போலிஸார், அபிஜீத் சிங்கை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரைக் போலிஸார் கைதுசெய்தனர். தனர்.
Also Read
-
கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!
-
ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !
-
"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !