India

திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தை.. ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் அதிர்ச்சி.. கேரளாவில் பகீர் !

திருவனந்தபுரம் அருகே உள்ளது கல்லம்பலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரின் மகள் ஸ்ரீலட்சுமி என்பவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்ற இளைஞரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து ஜிஷ்ணு ராஜூவிடம் தங்கள் காதலை கூறியுள்ளார்.

மேலும், தங்கள் மகளை தனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றும் நேரடியாக கூறியுள்ளார். இதற்க்கு முதலில் சம்மதம் தெரிவித்த ராஜூ பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது மகள் ஸ்ரீலட்சுமிக்கு வேறு இடத்தில மாப்பிள்ளை ஒருவரையும் பார்த்துள்ளார்.

குறுகிய இடைவெளியில் ஸ்ரீலட்சுமிக்கும் புதிதாக பார்த்த மாப்பிள்ளைக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. தந்தையின் வற்புறுத்தல் காரணமாக ஸ்ரீலட்சுமியும் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலட்சுமிக்கு திருமண ஏற்பாடு நடந்தது திருமணத்துக்கு முந்தைய நாள் தான் அவரின் காதலரான ஜிஷ்ணுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரின் தந்தை ராஜுவுடன் சண்டையிட்டுள்ளார்.

மேலும், அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கவும் செய்துள்ளார். அதோடு இதனை தடுக்க வந்த ஸ்ரீலட்சுமியும் தாக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அங்கு இருந்தவர்கள் ராஜுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் ஜிஷ்ணு மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிமுக ஆட்சியின் குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகிறது 'குட்கா' பாஜக .. - ஆதாரத்துடன் விமர்சித்த முரசொலி !