India

“ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க - அ.தி.மு.க அரசுகள் இழைத்த ஈனத் துரோகம்!” - முரசொலி தலையங்கம்

இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான எந்த ஒப்பந்தத்தையும், அந்த நாட்டு அரசுடன் மேற்கொள்ளும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை.

இந்திய அரசியல் சாசனத்தின் 9வது பிரிவின்படியும், குடியுரிமைச் சட்டம் - 1955ன் 9வது பிரிவின் படியும் இரட்டைக் குடியுரிமை வழங்க சட்டம் அனுமதிக்காது” என்று சொல்லி இருக்கிறார். இது இங்கு வாழும் ஈழத் தமிழர் மீது இடியாய் இறங்கி உள்ளது.

இதன்மூலம் பா.ஜ.க அரசு ஈனத் துரோகம் செய்துள்ளது உறுதியாகிறது. அதேபோல், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியமான ஒன்றுதான். ஆனால் அதனை செய்யாமல், இரண்டு மாத காலமாக ‘இரட்டைக் குடியுரிமை’ நாடகத்தை அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் நடத்தி வந்துள்ளன என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

Also Read: "முதலமைச்சருக்கு அடங்காமல் பேசும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யாருடைய ஊதுகுழல்?" - முரசொலி தலையங்கம்!