Election 2024

காங்கிரஸ் வெல்லும்போதெல்லாம் பொய்க்கும் கருத்துக்கணிப்புகள் - வரலாறு சொல்வது என்ன?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை கவர்ந்தனர். மேலும் பாசிச பாஜக அரசின் அவலங்களை எடுத்துரைத்து எதிர்க்கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்ட நிலையில், இந்தியா கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு பெருகியுள்ளது. தொடர்ந்து மக்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு இருப்பதால் பாஜக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகிறது. வாக்குப்பதிவின்போது வட மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் கள்ள ஓட்டு போடுவது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்தது. தென் இந்தியாவோடு, வட இந்தியாவும் பாஜகவுக்கு எதிராக களமிறங்கியது கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. இந்த சூழலில் இன்றுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக கொடுத்தவை போலவே தெரிகிறது.

ஏனெனில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட NewsX, NDTV, ரிபப்ளிக், India News உள்ளிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு சாதகமாக வெளியிட்டுள்ளது.குறிப்பாக NewsX, NDTV, India News நிறுவனம் சொல்லி வைத்ததுபோல் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தற்போது இது பாஜக கொடுத்த கருத்துக்கணிப்பு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

2004 election exit poll and results

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தேர்தல் முடிவின்போது மாறியுள்ளது. இதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு (2014-க்கு முன்) இதே போன்ற கருத்துக்கணிப்புகள் இரண்டு முறை பொய்யாகியுள்ளது. 1999-2004-ம் ஆண்டு பாஜக ஆட்சி முடிந்த பிறகு, 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியும், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் நேருக்கு நேர் சந்தித்தது. அப்போது 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 250 முதல் 275 வரையிலான இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் பாஜக பெற்றதோ வெறும் 181 இடங்கள் மட்டுமே.. அந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

2009 election exit poll and results

அதே போல் 2009 -ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 190 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 262 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. .

இதன்மூலம் தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது மாறும் என்று தெரிகிறது. அதே போல் தற்போது பாஜகவுக்கு சாதமாக வெளியான கருத்துக்கணிப்புகளும் தேர்தல் முடிவின்போது மாறும் என்று பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு தற்போது வெளியான கருத்துக்கணிப்புகள் பாஜகவே பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: ஜூன்4 : வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை - முதலமைச்சர் அறிவுறுத்தல் !