Election 2024
”இந்தியா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்” : முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி!
18 ஆவது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் இறுதிகட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள புர்ராபஜார் பகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "மோடிக்கு மேற்கு வங்கம் வரவும், தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. ஆனால், அவரது கட்சி பிரசார விளம்பரங்களில் அவரை பிரதமர் என குறிப்பிடுவது தனக்கு ஆச்சரியமாக உள்ளது.
காபந்து அரசின் பிரதமரான மோடியை தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் என்று குறிப்பிடாமல் பா.ஜ.க. தலைவா் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்.
மதமோதல்களை உருவாக்கி அதன்மூலம் குளிர்காய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை மேற்குவங்க மக்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !
-
"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !
-
"முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கனமழையால் சென்னையில் பாதிப்பு ஏற்படவில்லை" - அமைச்சர் துரைமுருகன் !