Election 2024
2 ஆம் கட்ட தேர்தல் - பிரச்சாரம் நிறைவு : 13 மாநிலங்களில் ஏப். 26ம் தேதி வாக்குப்பதிவு!
18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 66% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 தேர்தலைவிட குறைந்த வாக்குப்பதிவாகும்.
இதையடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 26 வெள்ளிக்கிழமை 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் நடைபெறுகிறது.
அசாம் - 5 , பீகார் 5, சத்தீஸ்கர் -3, கர்நாடகா -14, கேரளா 20, மத்திய பிரதேசம் 7, மகாராஷ்டிரா 8, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 13, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, மேற்கு வங்கம் 3, ஜம்மு மற்றும் காஷ்மீர் 1 ஆகிய 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் 13 மாநிலங்களிலும் வேகவேகமாக நடைபெற்று வருகிறது. காலை 7 முதல் முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
Also Read
-
கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!
-
ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !
-
"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !