Cinema
அடுத்தடுத்து பாலியல் புகார் : நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட 16 நிர்வாகிகள் ராஜினாமா !
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை சில காரணமாக வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வெளியானது. சுமார் 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மாநிலங்களில் இதுபோல் குழு அமைத்து விசாரிக்க நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த சூழலில் பிரபல நடிகை ரேவதி சம்பத், தான் தனது 16 வயதில் பழம்பெரும் நடிகர் சித்திக்கால் பாலியல் ரீதியான தொல்லை சந்தித்ததாகவும், இதனால் உடலளவிலும் மன அளவிலும் மிகுந்த பாதிப்பை அடைந்ததாகவும் தெரிவித்தார். இவரது இந்த பரபரப்பான புகாரையடுத்து, கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார்.
இவரைத் தொடர்ந்து கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா வெளிப்படையாக பாலியல் புகாரை முன்வைத்தார். இதனால் மாநில திரைப்பட அகாடமி தலைவர் பதவியிலிருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தார். அடுத்தடுத்து என பிரபல நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார் எழுந்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று தொடங்கவிருந்த நிலையில், அதுவும் ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து என பரபரப்பாகும் மலையாள திரையுலகம் குறித்து இந்திய திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 16 நிர்வாகிகள் கூண்டோடு தங்கள் பதவியை ராஜினாமா செய்து, நடிகர் சங்கத்தை கலைத்துள்ளனர். தற்போது இந்த நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
போலி IAS அதிகாரியாக புகார் கொடுக்க வந்த பெண்... உடந்தையாக இருந்த தூத்துக்குடி பாஜக நிர்வாகியும் கைது!
-
தேவதானம் திருக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு... - அறநிலையத்துறை அதிரடி!
-
நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பாஜகவின் நூதன மோசடி.. கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்.. நடந்தது என்ன?
-
Instagram-ல் ஆபாசமாக பாடல் பாடி வீடியோ வெளியிட்ட கானா கௌதம்... தட்டி தூக்கிய திருச்சி போலீஸ் !
-
வடலூர் வள்ளலார் பெருவெளி நிலத்தில் மருத்துவமனை : அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு!