Cinema
70- வது தேசிய விருதுகள் அறிவிப்பு : விருதுகளை அள்ளிக் குவித்த 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் !
இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான 70- வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது 'ஆட்டம்' என்ற மலையாள படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் படமாக 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படமும், சிறந்த மலையாள படமாக 'சவுதி வெள்ளைக்காரா' திரைப்படமும, சிறந்த கன்னட படமாக 'KGF - 2' திரைப்படமும், சிறந்த இந்தி படமாக 'குல்மோகர்' திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நித்தியா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகராக காந்தாரா திரைப்பட நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக சிறந்த நடன இயக்குனர்கள் விருது ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 'பொன்னியின் செல்வன் -பாகம் 1'படத்துக்காக சிறந்த பின்னணி இசை விருது ஏ.ஆர்.ரகுமானுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவிவர்மனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி பாடகி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
போலி IAS அதிகாரியாக புகார் கொடுக்க வந்த பெண்... உடந்தையாக இருந்த தூத்துக்குடி பாஜக நிர்வாகியும் கைது!
-
தேவதானம் திருக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு... - அறநிலையத்துறை அதிரடி!
-
நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பாஜகவின் நூதன மோசடி.. கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்.. நடந்தது என்ன?
-
Instagram-ல் ஆபாசமாக பாடல் பாடி வீடியோ வெளியிட்ட கானா கௌதம்... தட்டி தூக்கிய திருச்சி போலீஸ் !
-
வடலூர் வள்ளலார் பெருவெளி நிலத்தில் மருத்துவமனை : அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு!