Cinema
பெரிய பழுவேட்டரையராக ரஜினி நடித்திருந்தால் நல்லா இருந்துருக்கும்.. ஆனால்..," - சரத்குமார் கூறியது என்ன ?
இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 30-ம் தேதி (நாளை மறுநாள்) உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிவுள்ளது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஸ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என்று திரைபட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு சோழ சாம்ராஜ்யத்தை பற்றி குறித்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள். குறிப்பாக அவர்களின் திறமை, கடல் கடந்த வாணிபம், கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கியது உள்ளிட்டவை தெரியவரும்.
வட இந்தியாவில் இன்னும் கோட்டைகள் உள்ளன. ஆனால் இங்கு இல்லை. அதேபோல் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா தளமாக இன்னும் மேம்படுத்த வேண்டும். முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலை அனைவரும் பார்க்கும் இடமாக மாற்ற வேண்டும்.
பெரிய பழுவேட்டரையராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் உடல்வாகு அந்த அளவுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் சினிமாவில் அனைத்தும் சாத்தியம். எனவே ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டையராக நடித்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு கூச்சமாக இருந்தது. அதை பார்த்துவிட்டு இயக்குனர் மணிரத்னம் உங்களுக்கு ரொமான்ஸ் வராதா என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு கஷ்டப்பட்டு நான் நடித்தேன்" என்று கூறினார்.
Also Read
-
கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!
-
ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !
-
"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
-
தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் : ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி MP கடிதம்!
-
"சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அதிமுக மீதான அவதூறாகும்?" - அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !